ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் ‘டீம் ரிலே’ போட்டியில் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


கோவை: உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த கோவை வீரர், வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு திறமையை நிரூபித்துள்ளனர்.


ஜூன் 21 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ‘ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘டீம் ரிலே’ பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.


நேற்று நடைபெற்ற டீம் ரிலே போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில், கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருவரும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் போட்டியிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.




வீராங்கனை ஹாசினி இதுவரை 15 தேசிய பதக்கங்களையும், 2 சர்வதேச பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே மவுண்டன் பைக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறார். அதேபோல் வீரர் பிரனேஸ் 9 தேசிய பதக்கங்களையும், 4 சர்வதேச பதக்கங்களையும் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக மவுண்டன் பைக்கில் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அரசின் STAD (Sports Development Authority of Tamil Nadu) பிரிவு வீரர்களுக்கு தேவையான பயணச் செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.




வெண்கலப் பதக்கம் வென்ற ஹாசினி மற்றும் ப்ரனேஸுக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், கோவை சைக்கிளிங் அசோசியேஷன், பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...