கோவையில் பிறந்த 5 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிச் சென்ற கொடூரம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள மைதானத்தில் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் மைதானம் ஒன்று உள்ளது.

அங்கு நேற்று மாலை 7 மணியளவில் புதர் பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது புதருக்குள் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து முதலுதவி செய்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு பால் புகட்டும் வசதி இல்லாததால் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குழந்தையை அங்கு வீசிச் சென்றவர்கள் யார் என பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...