குப்பையில்லா நகரமாக கோவையை மாற்றுவோம்..! - களத்தில் இறங்கிய என்சிசி மாணவர்கள்

கோவை சுங்கம் குளக்கரையில் உள்ள குப்பைகளை, 200க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி என்சிசி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று சுங்கம் பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் அகற்றினர்.



இதில் ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப்பள்ளி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி, சர்வஜனா மேல்நிலை பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுசூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தேசிய மாணவர் படை கோவை மாவட்ட அதிகாரி குமரன் ஒருங்கிணைத்தார்.

ஆறாவது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...