சாலையில் நடந்து சென்றவரை தாக்கும் யானை - பரபரப்பான சிசிடிவி வீடியோ

கூடலூர் பகுதியில் பிடித்து சீகூர் வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்-2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பத்தேரி நகரில் புகுந்து ஒருவரை தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றி திரிந்த பிஎம்-2 மக்னா யானை, 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதபடுத்தியதுடன் 2 பேரையும் தாக்கி கொன்றுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வன பகுதியில் விடபட்டது. ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் கர்நாடக வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை திடீரென. கேரளா மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

முத்தங்கா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்த அந்த யானை இன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது.



முக்கிய சாலைகளில் உலா வந்த அந்த யானை அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. அதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த யானை வேறு பகுதிக்கு ஓடியது. இதனிடையே மக்னா யானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...