பொங்கலன்று நடக்கும் எஸ்பிஐ கிளார்க் தேர்வு - தேதியை மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலன்று நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: வரும் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அன்றைய தினத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் எஸ்.பி.ஐ நிர்வாகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொங்கலன்று நடக்கும் கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில், தமிழகத்தில் காலியாக உள்ள 350 க்கும் மேற்பட்ட இடங்களுக்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் தமிழர்கள் அதிக அளவு கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே தமிழர்களின் திருவிழா நாட்களில் எஸ்.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

தமிழர்களை அரசுப்பணியில் புறக்கணிக்கும் வேலையை விடுத்து , பண்டிகை இல்லாத காலங்களில் தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசு பள்ளிகளில் மாட்டுப் பொங்கலன்று விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...