கோவை கிணத்துக்கடவு அருகே சுடிதார் அணிந்து வீடு வீடாக சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமி - வைரல் வீடியோ..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மை காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செருப்புகள் காணாமல் போனதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2ம் தேதி இரவு பதிவான காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்து செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...