திருப்பூர் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்திய இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.



பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



50 கிலோ முதல் 75 கிலோ எடை பிரிவின்கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி மேடையில் வரிசையாக நின்ற இளைஞர்கள், வண்ணம் பூசிய தங்களது கட்டுடலை பல்வேறு நிலைகளில் அழகுப்படக் காட்டி, திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விசில் சத்தங்கள் முழங்க பார்வையாளர்களும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.



பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...