தனியார் கல்லூரியில் கோவை விழா - உறியடி, சமையல் போட்டியுடன் கொண்டாட்டம்

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கோவை விழாவில், பாரம்பரிய உணவுகளை சமைத்தும், உறியடி நடத்தியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோயம்புத்தூர் விழா 2023 நடைபெற்றது. யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் இணைந்து பாரம்பரிய சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டிகளில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



பாரம்பரிய சமையல் போட்டியில் , 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்று விறகு அடுப்பில், மண்பானைகளைக் கொண்டு சமைத்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், விறகு அடுப்பு மற்றும் மண்சட்டிகளை பயன்படுத்தி திருவாதிரை களி, கம்பு அடை, கேப்பை ரொட்டி போன்ற பல பாரம்பரிய உணவுகளை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.



போட்டியாளர்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை, கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து ருசித்துப் பார்த்து பரிசுபெறும் மாணவ-மாணவியர் குழுக்களைத் தேர்வு செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உறியடிப் போட்டியில், 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு ஆர்வத்தோடு உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பானைகளை குச்சியால் உடைத்து அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...