சங்கர கல்லூரியில் "நயா 2017" கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா


கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கர கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் "நயா 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை மற்றும் கலாச்சார விழா நடத்தி வருகிறது. இவ்விழாவில் தெனிந்திய கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா மேடை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியினை கல்லூரி இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

 





நிகழ்ச்சியில் கல்லூரி துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் திறமையில் வெற்றி உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதில், ஒருங்கினைப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்கான குறும்படம், குழு நடனம், முக ஓவியம், வினாடி வினா, நெருப்பில்லா சமையல், திறமை மற்றும் அறிவு சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தென் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே உணவகங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டது. 



இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பரிசுப் பொருட்களை வழங்கினார். துறை தலைவர் பிரியா கல்யாணசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். ஒருங்கினைபாளர்கள் திருஞான சம்பந்தன், நித்யா, சரவணக்குமார் மற்றும் விஷ்ணு பிரியதர்ஷினி ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...