சங்கர கல்லூரியில் "நயா 2017" கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா


கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கர கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் "நயா 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை மற்றும் கலாச்சார விழா நடத்தி வருகிறது. இவ்விழாவில் தெனிந்திய கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா மேடை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியினை கல்லூரி இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

 





நிகழ்ச்சியில் கல்லூரி துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் திறமையில் வெற்றி உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதில், ஒருங்கினைப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்கான குறும்படம், குழு நடனம், முக ஓவியம், வினாடி வினா, நெருப்பில்லா சமையல், திறமை மற்றும் அறிவு சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தென் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே உணவகங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டது. 



இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பரிசுப் பொருட்களை வழங்கினார். துறை தலைவர் பிரியா கல்யாணசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். ஒருங்கினைபாளர்கள் திருஞான சம்பந்தன், நித்யா, சரவணக்குமார் மற்றும் விஷ்ணு பிரியதர்ஷினி ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். 

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...