கோவை அருகே டிவைடரில் மோதி ஜவுளிக் கடைக்குள் புகுந்த டிப்பர் லாரி - ஓட்டுநர் படுகாயம்..!

கோவை அருகே தாமரைக்குளம் பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலை தடுப்பில் மோதி ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதி.



கோவை: கோவை மாவட்டம் தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். டிப்பர் லாரி உரிமையாளரான இவர், ஓட்டுநராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பொள்ளாச்சியில் கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு லாரியை கோவை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, தாமரைக்குளம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியதுடன், அருகே இருந்த ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரம் என்பதால், ஜவுளி கடைக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இதனிடையே விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் கடைக்குள் இருந்து வெளியே எடுக்க முயன்றனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய மணிமாறன் உடலில் வலது பக்கத்தில் பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...