கிராம பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு




வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கிராமப் பகுதிகளுக்குச் சென்று நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சியில் இன்று (11.02.2017) வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டதுடன் அப்பகுதி விவசாயிகளிடம் தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விபரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்பொழுதே அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுப்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றமோ, மற்ற பெயர் சேர்த்தல் விபரங்கள் விடுதலோ இருந்தால் சரி செய்ய இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டதுடன் விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் இதேபோல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்கெடுக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதிவு செய்து கொள்ள விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) சுரேஷ், மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டன். 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...