வாரிசு படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை?- பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் வாட்ஸ் ஆப்பில் வாரிசு பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை தமிழகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் நாளை வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.



இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் 550 ரூபாய்க்குக் கிடைக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தகவல்கள் பரபரப்பட்டு, தற்போது வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீதும், திரையரங்கு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...