ஈஷா மையம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி - கோவையில் இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களைக் கண்டித்து கோவையில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களை கண்டித்து கோவை மாவட்ட மாநகர் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், கோவை ஈஷா மையம் பொறுத்தவரை எந்த மதமும் சம்மதம் தான். இந்தியா அல்லாமல் அனைத்து நாடுகளிலும் யோகா பயின்று வருகிறார்கள். இதனை உடைக்க வேண்டும் என ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கோவை தொழில் நகரத்தை கம்யூனிஸ்ட்டுகள் முடக்கப் பார்க்கிறார்கள்.

மேலும் ஈஷா மையத்தைப் பொருத்தவரை கல்வி மற்றும் மருத்துவத்தை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து நல்ல காரியம் செய்து வருகின்றனர். இந்துக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் இந்து முன்னணி களத்தில் இறங்கும் என தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர்,உதயநிதி இன்று காலை ஒரு அறிக்கையை விட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுநரை ஓட விட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.



முதல்வர் ஸ்டாலின் சட்டையைக் கிழித்து வந்தாரே அதைப் பத்தி பேசினாரா? சுபஸ்ரீ மரணம் நக்சல் வேலையாக இருக்குமோ? எனச் சந்தேகம் உள்ளது. காவல்துறை உரிய விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...