கோவை கார் வெடிப்பு வழக்கு - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை!

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான கைதானவர்களில் 4 பேரிடம் தேசிய புனலாய்வு முகமை அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை நடத்தினர்.



கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் என கருதப்படும் இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கைதானவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்திருந்திருந்தனர்.

இந்நிலையில், முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை சென்னையில் வைத்து விசாரித்த பின்பு நேற்று காலை கோவைக்கு அழைத்து வந்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தினர்.



இதனைத் தொடர்ந்து, கோவை அழைத்துவரப்பட்ட 6 பேரில், சனாபர் அலி, முகமது ரியாஸ்,நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேர் மட்டும் நள்ளிரவு 11.30மணி அளவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பின் எஸ்.பியான ஸ்ரீஜித் தலைமையில் அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர்.



பின்னர், 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி. எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, அனைத்து விசாரணையையும் வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 4 பேரை, நள்ளிரவில் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...