கோவையில் பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு கோவையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

இதற்கென அரசு சார்பில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கோவையிலிருந்து, மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதிமுதல் 14 ஆம் தேதி வரை மதுரை, திருச்சி, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு100 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும் என மொத்தம் 240 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...