'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 52 - வது, வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதனை பொதுமக்களிடமும் வலியுறுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களிடம் ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...