'நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை' - எஸ்.பி எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.



இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 6 தாலுகாக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், "நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் (குட்கா, பான்பராக் மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை வியாபாரிகள் விற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.



முன்னதாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...