திருப்பூர் ஓடை புறம்போக்கில் சடலத்தைப் புதைக்க முயற்சி? - அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகம் எதிரே ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நிலம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் குழி தோண்டி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதற்காக குழி தோண்டுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, அதற்கு அந்த நபர்கள், சடலத்தை அடக்கம் செய்வதற்கு குழிதோண்டச் சொன்னதாகவும், அதற்காகத் தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், இந்த விவகாரம் தொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழி தோண்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, சடலம் புதைப்பதற்காகத்தான் அந்தக் குழி தோண்டப்பட்டது என்பதும், கூலிக்காக இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பதும் தெரியவந்தது. குழி தோண்டக் கூறிய நபர்கள் யார் என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓடைபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...