ஊட்டி நீர்வள ஆராய்ச்சி மையத்தில் மரங்கள் வெட்டிய விவகாரம் - 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு


நீலகிரி: ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் 234 ஏக்கர் நிலத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1958-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தைக் குத்தகைக்கு எடுத்து இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அந்நிய நாட்டு மரங்கள் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர், உதகை புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ரூ.49 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மழை காலத்தில் கீழே விழுந்த மரங்களுடன் சேர்த்து, நல்ல நிலையிலிருந்த மரங்களை அபாயகரமான மரங்கள் எனக் கூறி முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதும், இதில் உதகை தெற்கு வனச்சரக வனத்துறை அதிகாரிகள், மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உதகை தெற்கு வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன், ஆராய்ச்சி மைய தற்காலிக பராமரிப்பாளர் நாகராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மையத்தின் தலைமை அலுவலகத்தில் தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ஊட்டி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்திற்கும், விஞ்ஞானி மணிவண்ணன் அஸ்ஸாமிற்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒடிசாவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...