'அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை தேவை..!' - கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு!

கோவையில் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.



கோவை: கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



சங்கத்தின் செயலாளர் அன்னம் திருநாவுக்கரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், சுரேஷ் என்பவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து, தங்கள் சங்கம் பற்றியும் சங்க நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.



இதுகுறித்து பலமுறை நேரிலும் காவல்நிலையம் வாயிலாகவும் அறிவுரை வழங்கியும் அவர் கேட்க மறுப்பதாகவும், எனவே, அவதூறு பரப்பும் நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அந்த மனுவில் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட மருந்து வணிகளர் சங்க பொருளாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:



தங்களது சங்கத்தில் கடந்து ஒரு வருடத்திற்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அதில் தங்கள் அணி வெற்றி பெற்றது. தனக்கு எதிராக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் சங்கத்தின் மீதும், சங்க நிர்வாகிகள் குறித்தும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். கோவை மருந்து வணிகர் சங்கம் தற்போது சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அவற்றை தடுக்கின்ற விதமாகவும் சுரேஷ் செயல்பட்டு வருகிறார். அவர்மீது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...