வாடிவாசல் படத்தின் பெயரில் மோசடி - கோவை இளைஞர்களிடம் பணம் வசூல்!

கோவையில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புத் தருவதாகக் கூறி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஒரு கும்பல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.


கோவை: கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகிரியேஷன் தயாரிப்பில் எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், கோவையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு கிராமப்புற தோற்றத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகக் கூறி, நபர் ஒருவருக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுப்பதாக பேசும் இளைஞர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், பதிவுக்கட்டணம் ரூ.2000 ஆயிரத்தை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்புமாறு அவர் கூறி பண வசூலில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவாய்ப்பைப் பெற 9345268651 என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பரங்களைப் பார்த்து, கோவை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலர் இந்த மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்துவருவதாகத் தெரிகிறது.

இந்த மோசடி தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, நூதன முறையில் பண வசூலில் ஈடுபட்டுவரும் மோசடி நபர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...