கோவையில் விவசாய நிலங்களில் தொடரும் காட்டுயானைகள் அட்டூழியம் - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை பாப்பநாய்க்கன்பாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் நேற்றிரவு 2 காட்டுயானைகள் புகுந்து பாப்பாளி மரங்களை சேதப்படுத்திச் சென்றன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருந்து வருகின்றன. அவ்வப்போது, இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் உணவு தேடி மலை அடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

அப்படி நுழையும் காட்டுயானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தடாகம் சுற்றுப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், குடியிருப்புப் பகுதியிகளில் உணவு தேடியும் சுற்றித் திரிவதுமாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், பன்னிமடையை அடுத்துள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நரசிம்ம ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இந்தத் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த 2 காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.



காட்டுயானைகளின் செயல்கள் அங்கு பொருந்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் காட்டுயானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும், காட்டுயானைகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...