நீலகிரியில் ரூ.40 லட்சம் மதிப்பு புகையிலைப்பொருட்கள் கடத்தல் - ஓட்டுநர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.


நீலகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கூடலூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழக பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் கடத்தப்படுவதாக கூடலூர் காவல்துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொரப்பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக, லாரி மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



மேலும், லாரியை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...