கோவை, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - நிரந்தரமாக இயக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை.


கோவை: பல்லாண்டு கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயிலை நிரந்தமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையிலிருந்து பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு விழாக்கால சிறப்பு ரயில் விட வேண்டும் என பல்வேறு தரப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே இன்று முதல் 18ஆம் தேதி வரை கோவை- திண்டுக்கல்- கோவை, பொங்கல் விழாக்கால சிறப்பு ரயிலை இயக்கப்படுகிறது.

இந்த ரயில் காலை 09.20 மணிக்குக் கோவையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்குத் திண்டுக்கல்லைச் சென்றடையும். மறுபடியும் பிற்பகல் 2 மணி திண்டுக்கல்லில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்குக் கோவையை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கடந்த காலங்களில் இந்த ரயில், கோவையில் இருந்து திண்டுக்கல் வரையில் இயக்கப்பட்டு வந்தது. தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் உதவிக்கரமாக இருந்தது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர், இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென இந்த ரயில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயிலாக விடப்பட்டுள்ளது. இந்த ரயிலைப் பழனியில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் தை பூச விழா வரைக்கும் இயக்க வேண்டும். இதுமட்டுமன்றி கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...