கோவை ஆனைக்கட்டி அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்..!

ஆனைக்கட்டி அடுத்த கோபனாரி பகுதியில் வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்த யானை, தோட்டத்தில் இருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.



கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த காட்டு யானைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் கோவை ஆனைகட்டி கோபனாரி பகுதியில் உள்ள வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கம்பி வேலிகளை காட்டு யானை ஒன்று உடைத்துள்ளது.



இதையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.



இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...