கேரளாவில் ஒருவரை தாக்கி கொலை செய்த புலி - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வயநாடு வனத்துறை..!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு போக்கு காட்டி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளார்.


கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் நேற்று முன்தினம் புலி ஒன்று தாக்கி கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தப் புலியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர். ஆனால் கூண்டில் புலி சிக்காத நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வயநாடு வனத்துறையினர் புலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குப்பாடிரா பகுதியில் பதுங்கி இருந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தினர்.



அதனையடுத்து அந்த புலி மயங்கிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அங்கும் இங்குமாக சுற்றியது.



நீண்ட நேரத்திற்கு பின் மயங்கி கீழே படுத்ததை அடுத்து அந்த புலி பிடிக்கபட்டு வயநாட்டில் உள்ள வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த பிடித்த நிலையில் மாணந்தவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...