கோவையில் சாலை பாதுகாப்பு வார மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாலை பாதுகாப்பு வாரத்தின் 5வது நாளையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்து கலந்து கொண்டார்.



கோவை: விபத்துக்களை தவிர்க்கும் விதமாக சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி சாலை பாதுகாப்பு வாரத்தின் 5ஆம் நாளான இன்று, கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.



கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.



இந்த மாரத்தான் அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கிலோமீட்டருக்கு நடைபெற்றது.



இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன், துணை ஆணையாளர் சிலம்பரசன், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் உக்கடம் காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...