அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை - 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.


கோவை: திருவள்ளுவர் தினமான இன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோவை மாநகரில் அரசின் தடையை மீறி இறைச்சி மற்றும் மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளில் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...