கோவை தெற்குபாளையம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை - 4 பேர் கைது!

கோவை தெற்குபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய ரோந்து பணியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சேவல் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்குப் பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா சங்கர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த கலிவரதராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 சேவல்கள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...