தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற சரியான நபர் நான் இல்லை என முன்னாள் ஆளுநர் ரோசைய்யா பேட்டி


தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சரியான நபர் நான் இல்லை என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகியோர் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அடங்கிய பட்டியலை பொறுப்பு கவர்னரிடம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோசைய்யா, பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை.

இன்று மாலையோ அல்லது நாளையோ இதுகுறித்து ஆளுநரின் கருத்து வெளியாகலாம். நானும் சாதாரண மக்களைப்போல் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறேன். 

பா ஜ க பின்னாலிருந்து செயல்படுவதும், அ.தி.மு.க  எம்எல்ஏ-க்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவதும் தனக்கு தெரியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...