திருப்பூர் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழா - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சௌமியா கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் 34வது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர், பல்லடம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தாலுக்கா வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் இணைந்து இதை நடத்தினர்.



சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்லடம் நால்ரோட்டில் துவங்கிய இந்த பேரணியை பல்லடம் டி.எஸ்.பி செளமியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவு வரை சென்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியானது, என்ஜிஆர் சாலை வழியாக மீண்டும் நால் ரோட்டில் நிறைவுபெற்றது.



கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் போட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் வந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...