15 நாட்களுக்குள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்வு வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.

சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...