15 நாட்களுக்குள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்வு வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.

சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...