உடுமலையில் ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை ஒட்டி உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் புற நகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் வெங்கடுபதி, மாவட்ட இணைச்செயலாளர் கிருஷ்ணம்மாள், திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், நகர நிர்வாகிகள் அஞ்சலி, லைன் நடராஜ், ஜெயசீலன், ஜாபர், அருண் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...