கோவை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பெண் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றான்பாளையம் பிரிவில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முந்தமுயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகாயம் அடைந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அங்காத்தாள். இந்தத் தம்பதிக்கு முனியப்பன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார்.

இந்த நிலையில், தனது மகன் முனியப்பனுடன், அங்கத்தாள் பொள்ளாச்சி - கோவை சாலை உள்ள சென்றான்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி போட்டி போட்டுக்கொண்டு வந்த தனியார் பேருந்துகள் அங்கத்தாள் மற்றும் அவரது மகன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே அங்காத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் முனியப்பனை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அங்காத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களான சந்தோஷ் குமார், செந்தில்குமார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...