மேட்டுப்பாளையம் பெள்ளாதி மாரியம்மன் கோயில் நில ஏல அறிவிப்பு ரத்து - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெள்ளாதி மாரியம்மன் கோவில் உள்ளது.

சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை, கோயில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இந்த 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோயில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலத்தை நடத்த முயன்றபோது, கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே மோதல் உருவான நிலையில், காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைவில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...