கோவையில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிமணி (37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் அபிமணி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரை மறித்து அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் என செல்போனை கேட்டுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய அபிமணி இளைஞர்களிடம் தனது செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை பெற்று கொண்ட அந்த இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அபிமணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை மடக்கி பிடித்த அந்த இளைஞர்கள் அபிமணி சட்டை பையில் இருந்த ரூ.2,000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அபிமணி போத்தனூர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...