உதகையில் எமரால்டு அணையிலிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மீட்பு

உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500 கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி மர்மநபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு.


நீலகிரி: உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்களை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ளது. இதனால் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியைக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனைக் கண்காணிக்கும் பணியில் நீலகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலையும் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் சந்திக்கக்கூடிய சுருக்கி பாலம் என்ற இடத்தில் ரேஷன் அரிசி சிறுசிறு மூட்டைகளாகக் கட்டப்பட்டு அணைக்குள் வீசப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் அணையின் நீரில் தலா 15 கிலோ ரேஷன் அரிசி வீதம் 100 பைகளில் வீசப்பட்டிருந்த அரிசியினை மீட்டனர்.



மேலும் இந்த ரேஷன் அரிசி பைகளை அணைக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...