காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் தொட்டி - உடுமலை தாலுக்கா அலுவலகத்தில் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் முறையான குடிநீர் வசதி செய்யப்பட்டாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி இதுவரை காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருவது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இதுவரை செய்யப்படவில்லை.



இங்கு தாலுக்கா அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே ஒரு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால், அரசு சார்ந்த பணிகளுக்காக தாகத்துடன் வரும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...