உடுமலையில் சலகெருது ஆட்டத்தில் வீரர்களை பந்தாடிய காளை - வைரல் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆல்கொண்ட மால கோயிலில் பாரம்பரிய சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்காளை ஒன்று வீரர்களை விரட்டி விரட்டி பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் களைகட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சலக்கெருது (சலங்கை எருது ஆட்டம்) ஆட்டம்.



கால்களில் சலங்கை கட்டிய இளைஞர்கள், கையில் நீண்ட கம்புகளை வைத்து, உருமி இசைக்கேற்ப காளையின் முன்னே நடனமாடி, காளைகளையும் ஆட வைப்பதுதான் சலக்கெருது ஆட்டம். திருப்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில், உடுமலை அருகே உள்ள ஆல் கொண்ட மால கோயிலிலும் சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது.



சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் இந்த பாரம்பரிய சலகெருது ஆட்டம் நடத்தப்பட்டது.



அப்போது, சலகெருது ஆட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட இளஞ்காளை ஒன்று, வீரர்கள் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்களை துரத்தி துரத்தி பந்தாட முயன்றது. இந்தக் காட்சியானது, "கொம்பன்" பட பாடல் பின்னணியுடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...