கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம் - 4,393 பேருக்கு சோதனை

கோவை விமானநிலையத்தில் ஜன.1ம் தேதி முதல் இதுவரை 4ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்குவரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஷாா்ஜாவில் இருந்து ஜனவரி 16-ந் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 38 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கோவை விமான நிலையத்தில் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 4,393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேரிடம் இருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவா்களில் கோவை, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா்.

இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் புதிய வகை கொரோன நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல்லை சோ்ந்தவரின் சளி மாதிரிகள் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...