கோவை மலுமிச்சம்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும், ஆர்.எஸ் எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை தமிழ்நாடு ஆளுநர் கடைப்பிடித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதுக்கரை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காளீஸ்வரன், ஜி.ஏ.கண்ணன், ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.பே.துரை, புவனேஸ்வரி, நஞ்சப்பன், முருகானந்தம், உதயகுமார் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...