திருப்பூர் உடுமலை அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்..!

உடுமலை அடுத்த சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கண்காணிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் கோவிலுக்கு வந்து கன்றுகளை தானமாக கொடுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பெறப்படும் கன்றுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினர் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தானமாக வழங்கப்பட்ட கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நோய் தாக்குதலுக்கு உள்ளான கன்றுகளை தனிமைப்படுத்திய கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், தானமாக பெறப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் குளறுபடி, கூடுதல் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் கன்றுகள் பராமரிப்பில் குழப்பம் ஏற்படுத்திய கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...