ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சூலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை சூலூர் அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வி.எம்.சி மனோகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சி. மனோகரன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாகவும் ஆன்லைனில் உள்ளிட்ட விளையாட்டுக்கு தடை செய்யும் மசோதாவை அங்கீகரிக்காமல் இருந்து வரும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது, என்றார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...