கோவை துடியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைக் கண்டித்து துடியலூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: துடியலூரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்தியக் காங்கிரஸ் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட அகில இந்தியக் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி.மணி தலைமை தாங்கினார். பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ் வரவேற்றுப் பேசினார்.



மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொறுப்பாளர் சின்னு ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஆளுநர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திரபாபு, நாகராஜ், எஸ் எஸ் குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரியகுமார், பார்த்திபன், சதீஷ்குமார், காதர் பாய், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், வடிவேல், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...