பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கழுத்தறுத்து கைதி தற்கொலை முயற்சி

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து, போலீசார் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீசார் முன்னிலையில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (29), இவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த கருப்பசாமி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் கருப்பசாமி பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து காமநாயக்கன்பாளைய போலீசார் அங்குச் சென்று கருப்பசாமியைக் கைது செய்து பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமியைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பாதுகாப்புடன் கருப்பசாமியை அழைத்துச்சென்ற போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாகத் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கருப்பசாமியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



அதேபோன்று கருப்பசாமி மனைவி மஞ்சுளாவும், பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் போலீசாரின் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த கைதியிடம் ஆயுதம் எவ்வாறு வந்தது? போலீசார் கைதியை ஆஜர்படுத்தும் போது ஏன் சோதனை மேற்கொள்ளவில்லை?எதனால் கைதி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...