துடியலூரில் மதுபானங்கள் விற்ற இருவர் கைது!

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதூர் பகுதிகளில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குச் சென்ற துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல், அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 22 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கே.என்.ஜி.புதூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் மது விற்றதாகக் கைது செய்தார். அவரிடம் இருந்து 18 பாட்டில் மது பறிமுதல் செய்து இருவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...