உடுமலை அருகே எஸ்வி புரத்தில் நிழற்கூரை அமைக்கக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அமைக்க அதிகாரிகளுக்குச் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அகற்றப்பட்ட இடத்தில் புதிய நிழற்கூரை அமைக்கக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை - கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில், நிழற்கூரை இருந்தது. நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையிலிருந்தது.

இதனையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்திற்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.



மக்கள் சாலையில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பேருந்து நிறுத்தம் அடையாளம் இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படும். பேருந்துகளால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எஸ்.வி.புரத்தில் புதிதாகப் பேருந்து நிறுத்த நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...