கோவை பேரூர் பகுதியில் சேவல்சண்டை - 6 பேர் கைது

கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது.


கோவை: பேரூர் சுடுகாடு அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பேரூர் சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குச் சேவல் சண்டை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), மணிகண்டன் (35), ராஜேந்திரன் (38), முருகன் (37), பழனிச்சாமி (53), கண்ணன் (46) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 சேவல் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...