கோவை தடாகம் சாலையில் மாதிரி ரவுண்டானா அமைப்பு

கோவை தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல் மற்றும் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம்.


கோவை: மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.

கோவை, தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல்,போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், மாநில நெடுஞ்சாலைகள் பிரிவு உதவி கோட்டப் பொறியாளர் எஸ்.சோழவளத்தான் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுடன் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் இன்று மாலை 4.00 மணிமுதல் நடைபெற்றது.

இதனால், கௌலிபிரவுன் சாலை வழியாக மருதமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், உழவர் சந்தையை அடுத்த குரு கோவிந்தசிங் சாலையில் இடது புறமாகத் திரும்பி, மேற்கு பெரியசாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக, லாலிரோடு ஜங்ஷனை அடைந்து அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இதனை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...