திருப்பூர் குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார்‌ மோதி விபத்து - தொழிலாளி பலி!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தேங்காய் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்துள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தாராபுரம்-கோவை ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக கோவை நோக்கிச் சென்ற கார், எதிர்பாராதவிமாக சண்முகதின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சண்முகத்தின் ஒரு கால் துண்டாகியது. மேலும் அவர் காருடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...